For Daily Alerts
Just In
ஈவ் டீசிங்கில் இறங்கிய ராணுவ வீரர்
சென்னை:
சென்னையில் பெண்ணைக் கேலி செய்த ராணுவ வீரரையும், அவரது நண்பர்களையும் பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
பரங்கிமலை ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் பழங்கள் வாங்குவதற்காக திங்கள்கிழமை கருணீகர் தெருவிற்கு வந்தார்.அப்போது, பரங்கிமலை ராணுவ பயிற்சி மையத்தில் வேலை செய்து வரும் தர்சின் சிங்கும் அவரது நண்பர்கள் சிலரும் அந்தப் பெண்ணைக் கிண்டல் செய்தனர்.
தர்சின் சிங் அப்பெண்ணிடம் முறைகேடாக நடந்து கொண்டதாகத் தெரிகிறது. இயைடுத்து அப்பெண் கூச்சல் போட்டுள்ளார். உடனடியாக தர்சின்சிங் கூட்டாளிகளுடன்ஓடத் தொடங்கினர்.
இதையடுத்து அங்கிருந்த பொதுமக்களில் சிலர் தர்சின் சிங் மற்றும் அவரது நண்பர்களை விரட்டிப் பிடித்து கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர்.
Comments
Story first published: Tuesday, September 12, 2000, 5:30 [IST]