For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விடை பெறுகிறார் தடகள வீரர் ராஜீவ் பாலகிருஷ்ணன்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

சர்வதேச அதலெடிக்ஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்தியாவின் அதலெடிக்ஸ் வீரர் ராஜீவ் பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

தற்போது சர்வான் சர்வதேச அதலெடிக் போட்டிகளில் பங்கு கொண்டுள்ள அவர், இப் போட்டி முடிந்தவுடன் ஓய்வு பெறுவதாகத் தெரிவித்தார்.

4ஙீ 100 தடை ஓட்டப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பல சர்வதேச போட்டிகளில்பங்கு கொண்டவர் ராஜீவ் பாலகிருஷ்ணன். அமெரிக்காவில் வசித்து வரும் அவர்,சாப்ட்வேர் பொறியாளராகப் பணியாற்றி வந்தார்.

சிட்னி ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள நடைபெற்ற தகுதிச் சுற்றுப்போட்டிகளில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்த அவர் தான் பார்த்த வேலையைராஜிநாமா செய்து வந்து வந்தார்.

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற நிர்ணயிக்கப்பட்ட 39.28 நிமிட நேரத்தில் பந்ததூரத்தைக் கடந்து ராஜீவ் பாலகிருஷ்ணன் உள்பட 4 பேர் கொண்ட அணி தகுதிபெற்றது.

ஆனால், பின்னர் நடந்த ஆய்வில் சக வீரர் ஆனந்த் மென்செஸ் செய்த தவறால்ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள தொடர் ஓட்ட அணி தகுதி இழந்தது.

100 மீட்டர் பந்தயத்தில் கலந்து கொண்ட பாலகிருஷ்ணன், நிர்ணயிக்கப்பட்ட தகுதிஅளவை எட்டாததால் சிட்னி ஒலிம்பிக்குத் தகுதி பெறவில்லை.

இதையடுத்து சர்வதே அதலெடிக்ஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற ராஜீவ்பாலகிருஷ்ணன் முடிவு செய்துள்ளார். ஓய்வு பெற்ற பிறகு சாப்ட்வேர் பொறியாளர்பணியில் தொடர்ந்து ஈடுபட அவர் திட்டமிட்டுள்ளார்.

அதலெடிக்ஸ் போட்டியில் இந்தியாவுக்கு என்னால் முடிந்ததைத் செய்துவிட்டதாகக்கருதுகிறேன். அடுத்த ஒலிம்பிக்கில் இந்தியாவில் சார்பில் கலந்து கொள்ளமுயற்சிப்பேனா என்பதை இப்போதைக்குச் சொல்ல முடியாது.

கடைசியாக நான் பார்த்த வேலையை ராஜிநாமா செய்துவிட்டேன். இப்போது நான்கலந்து கொண்டுள்ள அதலெடிக்ஸ் போட்டிக்குப் பிறகு முழு மூச்சில் வேறொருவேலையைத் தேடும் பணியில் இறங்குவேன் என்றார் ராஜீவ் பாலகிருஷ்ணன்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X