5 மணி நேரம் குலுங்கிய குஜராத்

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்:

குஜராத் மாநிலம் பாவ்நகர் டவுன் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பல வீடுகள் இடிந்து விழுந்தன. இந்தநிலநடுக்கத்தில் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை.

ஐந்து மணிநேரங்கள் இந்த நிலநடுக்கம் நீடித்தது. முதலில் பாவ்நகர் டவுன் பகுதியில் காலை 6.20 மணிக்கு 3.08 ரிக்டர் அளவில் ஏற்பட்டது. 6.24 மணிக்கு4.4. என்ற ரிக்டர் அளவில் பாவ்நகரில் இன்னொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 11.30 மணிக்கு அதே பகுதியில் 3.4 ரிக்டர் அளவில்நிலநடுக்கம் இருந்தது.

இதுகுறித்து பாவ்நகர் வளர்ச்சி ஆணைய அதிகாரி ஜெயந்த் தேவ் கூறுகையில், நிலநடுக்கத்யைடுத்து பாவ்நகர்டவுன் பகுதியில் வசித்து வந்த மக்கள்அனைவரும் தெருக்களில் இறங்கி ஓட ஆரம்பித்தனர். பல வீடுகள் இடிந்து விழுந்தன என்றார்.

முதல்வர் விரைந்தார்:

நிலநடுக்கம் குறித்துக் கேள்விப்பட்டதும் முதல்வர் கேஷூபாய் படேல் பாவ்நகர் டவுன் பகுதிக்கு விரைந்து சென்று பார்வையிட்டார். குஜராத்தில் ஆகஸ்ட்9 மற்றும் 13 ம் தேதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது நினைவிருக்கலாம்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+