பதவியை உதறினார் கபில்தேவ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கபில் தேவ் செவ்வாய்க்கிழமை விலகினார்.

இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஏ.சி. முத்தையாவுக்கு அவர் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.

பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கபில் தேவ் விலகியதை அடுத்து இந்திய அணிக்கு அன்ஷுமன் கெய்க்வாடை நியமிக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதுஎன்று வாரியத்தின் செயலர் லேலே தெரிவித்தார்.

கெய்வாட்டை இன்னும் தொடர்பு கொள்ள முடியவில்லை. வாரியத்தின் முடிவு பற்றி அவரது மனைவியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியாளராகப் பொறுப்பேற்க கெய்க்வாட் ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் அவர் பணியாற்றும் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு அவருக்குத்தேவையான விடுமுறையை வாரியம் கேட்டுப் பெறும் என்றார் லேலே.

கென்யாவில் நடைபெற உள்ள ஐ.சி.சி. நாக்அவுட் கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணியில் 23 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கானபயிற்சி முகாம் சென்னையில் செப்டம்பர் 14-ம் தேதி தொடங்குகிறது.

இந் நிலையில் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கபில் தேவ் விலகிக் கொண்டதை அடுத்து உடனடியாக புதிய பயிற்சியாளரை நியமிக்கும் நிர்பந்தத்தில் கிரிக்கெட்வாரியம் உள்ளது.

கபில்தேவ் மீது மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இது தொடர்பாக அவரிடம் பல முறை விசாரணை நடத்தப்பட்டது.

கபில்தேவ் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கபில் தேவ்விலக்கப்படலாம் என்று கூறப்பட்டது.

பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கபில் தேவ் விலக வேண்டும் என்றும் பலர் கோரினர். இந் நிலையில், இந்திய அணிக்குப் புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படலாம்என்றும் கூறப்பட்டது.

ஆனால், சில நாட்களுக்கு முன் நிருபர்களைச் சந்தித்த கிரிக்கெட் வாரியத் தலைவர் ஏ.சி. முத்தையா, பயிற்சியாளர் பொறுப்பில் கபில்தேவ் தொடருவார்என்று அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து இந்திய அணிக்குப் பயிற்சி அளிக்க வரும்படி கபில்தேவுக்கு வாரியத்தின் செயலர் லேலே அழைப்பு விடுத்தார். திங்கள்கிழமைதான்இதற்கான கடிதத்தை லேலே அனுப்பினார்.

ஆனால், தான் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக கபில்தேவ் செவ்வாய்க்கிழமை வாரியத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

கபில்தேவின் இம் முடிவு கிரிக்கெட் உலகினருக்கு பெரும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளித்துள்ளது.

கபில்தேவின் முடிவு எனக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கும்படி வாரியத்திடமிருந்து எந்த அழைப்பும் எனக்குவரவில்லை.

பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கும்படி வாரியம் கேட்டுக் கொண்டால் நிச்சயம் நான் அப் பொறுப்பை ஏற்றுக் கொள்வேன் என்று இந்திய அணியின்முன்னாள் வீரரும், ஜூனியர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளருமான ரோஜர் பின்னி தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+