வருகிறார் கெய்க்வாட்
அகமதாபாத்:
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அன்ஷுமன் கெய்க்வாட் மீண்டும் பொறுப்பேற்க உள்ளதாக கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலர் லேலேதெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த கபில் தேவ், அப் பொறுப்பை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தார். இதையடுத்து புதியபயிற்சியாளராக கெய்க்வாட் நியமிக்கப்படவுள்ளார்.
வடோதராவில் இருந்த கெய்க்வாட்டை லேலே தொடர்பு கொண்டு கபில் தேவ் ராஜிநாமா செய்துவிட்டதையும், பயிற்சியாளர் பொறுப்பை உடனடியாகஏற்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். லேலேயின் வேண்டுகோளை ஏற்று இந்திய அணிக்குப் பயிற்சி அளிக்க கெய்க்வாட் ஒப்புக் கொண்டார்.
கென்யாவில் நடைபெற உள்ள ஐ.சி.சி. நாக் அவுட் கிரிக்கெட் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள 23 பேர் கொண்ட இந்திய அணி சென்னையில் பயிற்சிபெற உள்ளது. அந்த பயிற்சி முகாமில் கெய்க்வாட் கலந்து கொண்டு அணியினருக்குப் பயிற்சி அளிப்பார்.
செப்டம்பர் 20-ம் தேதி கென்யா போட்டிக்கான 14 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்படவுள்ளது. இந்த அணியுடன் கெய்க்வாடும் கென்யாசெல்வார். மறு உத்தரவு வரை இந்திய அணியின் பயிற்சியாளராக கெய்க்வாட் நீடிப்பார்.
கெய்க்வாட்டைத் தான் தொடர்பு கொண்ட போது அவர் சிலர நிபந்தனைகளையும் கட்டுப்பாடுகளையும் தெரிவித்ததாகத் தெரிவித்த லேலே, அவை பற்றிபின்னர் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
ஏற்கெனவே இந்திய அணியின் பயிற்சியாளராக கெய்க்வாட் ஓராண்டு பணியாற்றி உள்ளார். இப்போது இரண்டாவது முறையாக பயிற்சியாளர் பொறுப்பைஅவர் ஏற்கிறார்.
கபில் தேவ் மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. அவரிடம் விசாரணையும், வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனைகளும்மேற்கொள்ளப்பட்டன. அதனால், பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கபில் தேவ் விலக்கப்படுவார் என்று கூறப்பட்டது.
ஆனால், பயிற்சியாளராக கபில் தேவ் தொடருவார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் ஏ.சி. முத்தையா தெரிவித்தார். அதைத்தொடர்ந்து இந்திய அணிக்குப் பயிற்சி அளிக்க வரும்படி கபில் தேவுக்கு வாரிய செயலர் லேலே கடிதம் எழுதினார். ஆனால், தனது பயிற்சியாளர் பொறுப்பைகபில் தேவ் ராஜிநாமா செய்து அதற்கான கடிதத்தை முத்தையாவுக்கு அனுப்பிவிட்டார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications