விசைத்தறி அதிபர் குடும்பத்துடன் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

சேலம்:

சேலம் அருகே கடனைத் திருப்பிச் செலுத்த இயலாத விசைத்தறி அதிபர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டார்.

சேலம் மாவட்டம், சித்தர் கோயில் அருகே உள்ள வெங்கம்பட்டியைச் சேர்ந்தவர் சுவாமிநாதன் (35).இவர் இதே ஊரில் விசைத்தறி வைத்திருந்தார். தொழில் நடத்த பல்வேறு இடங்களில் கடன்பெற்றுள்ளார்.

வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த இயலாத நிலை ஏற்பட்டது. எனவே, மிகவும் கஷ்டத்திற்குள்ளானசுவாமிநாதன், குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

செப்டம்பர் 10-ம் தேதி இரவு, குளிர்பானத்தில் விஷத்தைக் கலந்து, அவரது மனைவி தனம் (28),பூங்கொடி (8), நான்கு மாதமே நிரம்பிய ஆண் குழந்தை பாலன் ஆகியோருடன் சேர்ந்து குடித்தார். இதில்அனைவரும் இறந்தனர்.

விஷம் குடித்த சம்பவம் இரவில் நடந்ததால் யாரும் காப்பாற்ற இயலாமல் போனது. செப்டம்பர்11-ம் தேதி, இவரது வீடு நீண்டநேரமாகியும் திறக்காததால், போலீசாருக்குத் தகவல்தெரிவிக்கப்பட்டது. போலீசார் கதவைத் திறந்து பார்த்தபோது, 4 பேரும் இறந்து கிடந்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+