"மாஜிக்கள் தொடங்கும் கட்சியில் இணைகிறார் பன்ருட்டி
சென்னை:
அ.தி.மு.க மாஜி அமைச்சர்கள் தொடங்கும் புதிய கட்சியுடன் பண்ருட்டி ராமச்சந்திரனின் மக்கள் நில உரிமைக் கழகம் இணைகிறது.
இத்தகவலை சென்னையில் செவ்வாய் கிழமை செய்தியாளர்களிடம் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார். அவர் அளித்த பேட்டி:
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் இணைந்து வரும் 18ம் தேதி புதிய கட்சியை தொடங்க உள்ளனர். அந்த கட்சியில் எனதுதலைமையில் இயங்கிய மக்கள் நல உரிமைக் கழகம் இணையும். அதற்கான தீர்மானம் திங்கள்கிழமை நடந்த கட்சியின்பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில் மூன்றாவது அணி அமைவதற்கான முயற்சியை எங்களது புதிய கட்சி மேற்கொள்ளும். இந்த புதிய கட்சி தமிழகத்தில்நல்லாட்சி ஏற்பட பாடுபடும்.
தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய இரண்டு கட்சிகளின் ஆட்சியையும் மக்கள் பார்த்து விட்டனர். இப்போது மூன்றாவது அணி உருவாவதைமக்கள் விரும்புகின்றனர் என்றார். பேட்டியின் போது முன்னாள் அமைச்சர்கள் எஸ்.டி.சோமசுந்தரம், ராஜாராம் ஆகியோர்இருந்தனர்.












Click it and Unblock the Notifications