தீவிரவாதிகளின் தற்கொலைப் படைத் தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் சாவு
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பீர்வா என்ற இடத்தில் தற்கொலைப் படையைச் சேர்ந்த 2 தீவிரவாதிகளின் தாக்குதலில் ஒரு ராணுவ அதிகாரி உள்பட 11 ராணுவவீரர்கள் கொல்லப்பட்டனர்.
தலைநகர் ஸ்ரீநகரிலிருந்து 30கிலோமீட்டர் தூரத்தில் பீர்வா உள்ளது. செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்த தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்தது.
பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜமாத் உல் முஜாஹிதின் ஆகிய இரு தீவிரவாத அமைப்புகளும் கூட்டாக இந்த தாக்குதலுக்குப்பொறுப்பேற்றுள்ளன.
தீவிரவாதிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகள் ராணுவ வீரர்கள் போல உடை அணிந்து வந்துள்ளனர். பீர்வாவிலுள்ள 34-வதுராஷ்ட்ரிய துப்பாக்கிப் படை முகாமுக்குள் அதிகாலை 2.30 மணியளவில் நுழைந்துள்ளனர். இந்திய வீரர்கள் போலவே உடையும், அவர்கள் வைத்திருப்பதுபோன்ற துப்பாக்கிகளையும் அவர்கள் வைத்திருந்ததால், யாருக்கும் அவர்கள் மீது சந்தேகம் வரவில்லை.
முகாமுக்குள் நுழைந்த அவர்கள் அங்கிருந்த ராணுவ வீரர்கள் மீது சரமாரியாகச் சுட ஆரம்பித்தனர். திடீரென துப்பாக்கியால் இரண்டு பேர் சுடுவதால்அதிர்ச்சியடைந்த ராணுவ வீரர்கள் சுதாரித்துக் கொண்டு திருப்பிச் சுடத் துவங்கினர். ஆனால், அதற்குள் தீவிரவாதிகளின் வெறித் தாக்குதலில் மேஜர்மகேஷ் பாண்டே மற்றும் மூன்று வீரர்கள உயிரிழந்திருந்தனர்.
பிற ராணுவ வீரர்கள் தீவிரவாதிகளைச் சூழ்ந்து கொண்டனர். ஆனால் அவர்கள் இருவரும் அருகிலிருந்த ஒரு கட்டடத்திற்குள் ஒளிந்து கொண்டு சுடத்துவங்கினர். இறுதியில் ராணுவ வீரர்கள்இரு தீவிரவாதிகளையும் சுட்டு வீழ்த்தினர்.
கட ந்த ஆறு மாதங்களில் தீவிரவாதிகள் நடத்திய பெரிய அளவிலான தற்கொலைப் படைத் தாக்குதல் ஆகும் இது.
இத்தாக்குதலில் நான்கு பேர் மட்டுமே ராணுவத் தரப்பில் இறந்ததாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சாவு கூடுதலாகஇருக்கும் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்தையடுத்து பீர்வா முகாமுக்கு கூடுதலாக படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஐ.ஏ.என்.எஸ்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications