காஷ்மீர் சென்சஸ் பணியைப் புறக்கணிக்க அரசு ஊழியர்கள் முடிவு

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணியைப் புறக்கணிக்க அம் மாநில அரசு ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.

பாகிஸ்தான் ஆதரவு ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் மிரட்டலை அடுத்து இம் முடிவை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பெரிய அரசு ஊழியர்கள் அமைப்பான ஜம்மு-காஷ்மீர் அரசு ஊழியர்கள் சங்கம் வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பு:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத நடவடிக்கைகளை ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பினர் மீண்டும் தொடங்கியுள்ளனர். மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு அவர் மிரட்டல் விடுத்துள்ளனர்.

உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபடுவது என்பது முடியாத காரியம். ஆகவே,ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெறும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியில் எங்கள் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் யாரும் கலந்துகொள்ளமாட்டார்கள்.

அரசு ஊழியர்களின் நியாயமான நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற காஷ்மீர் மாநில அரசு தவறிவிட்டது. ஊழியர்கள் இடையே பிரச்சினைகளைமாநில அரசு உருவாக்கிவிட்டது என்று ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு ஊழியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலேயே 22 ஆயிரம் பேர் மிகப்பெரிய அரசு ஊழியர்கள் சங்கம் இவ்வாறு அறிவித்துள்ளதை அடுத்து அம் மாநிலத்தில் மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணி கடுமையாகப் பாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது.

22 ஆயிரம் அரசு ஊழியர்கள் வரவில்லை என்றாலும் மாற்று ஏற்பாடுகள் செய்து மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணி தொடரும் என்று மாநிலமக்கள் தொகைக் கணக்கெடுப்பு இயக்குநர் பெரோஸ் அகமத் தெரிவித்தார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+