காஷ்மீரில் ஒரு நந்தவனம்
கரோரா (ஜம்மு-காஷ்மீர்):
ஆசியாவின் மிகப் பெரிய ஏரி என்று அழைக்கப்படும் ஊலர் ஏரிக் கரையில் அமைந்துள்ள ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள், வனப் பகுதியை சீரமைத்துசுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பேருதவி புரிந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ளது கரோரா கிராமம். இது தலைநகர் ஸ்ரீநகரிலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்தப் பகுதி நீர்ப்பிடிப்பு பகுதிஎன்பதால் மழைக்காலங்களில் இங்கு லேசான மழை பெய்தாலே தண்ணீர் பெருக்கெடுக்கும். அடிக்கடி வெள்ளம் வந்து வயல்களை அழித்து விடும்.இதனால் இதற்கு ஒரு முடிவு கட்ட கிராமத்து மக்கள் தீர்மானித்தனர்.
10 ஆண்டுகளுக்கு முன் கிராமத்து பெரியவர்கள் அனைவரும் ஒன்றாக கூடி ஆலோசனை நடத்தினர். லாலா லோன் என்ற பெரியவர் தலைமை தாங்கினார்.அப்போது லாலா லோன் பேசுகையில், வெள்ளம் ஏன் திடீர் என்று யோசிக்க வேண்டும். மலைப் பகுதியில் உள்ள வனப் பகுதியில் மரங்களை வெட்டிவிட்டோம். இதனால் அங்கு மண் பலமிழந்து மழை நீர் வெள்ளமாக கிராமத்திற்குள் வருகிறது.
இப்போதைய பிரச்சினையிலிருந்து தப்ப வேண்டுமானால், இப்பகுதி முழுவதும் மரம் நட வேண்டும் என்றார். இதையடுத்து 100 ஏக்கர் பரப்பளவில்அழிக்கப்பட்ட வனப் பகுதியை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது.
10 ஆண்டுக்கு வைக்கப்பட்ட மரங்கள் வளர்ந்து கரோரா கிராமமே சிறந்த சோலைவனமாக மாறியுள்ளது. இந்த வனத்திற்கு பாதுகாவலர்களாகஇருவர் உள்ளனர். ஒவ்வொரு மாதமும், கிராம மக்களிலிருந்து தலா ரூ. 30 வசூலித்து அது இவர்களுக்குச் சம்பளமாக தரப்படுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications