For Daily Alerts
Just In
மேற்கு வங்க விவகாரம்: ஜனாதிபதியைச் சந்தித்தார் அத்வானி
டெல்லி:
குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணனை மத்திய உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.
மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்தும் பிரதமர் வாஜ்பாயியின் அமெரிக்கப் பயணம் குறித்தும் நாராயணனிடம்அத்வானி விளக்கியதாக அவரது அலுவலக அதிகாரி தெரிவித்தனர்.
வழக்கமாக நாட்டின் நிலவரம் குறித்து பிரதமர்தான் குடியரசுத் தலைவருக்கு விளக்கிக் கூறுவார்.
ஆனால், பிரதமர் வாஜ்பாய் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளதால் மத்திய அமைச்சரவையில் மூத்த அமைச்சர் என்ற முறையில்நாராயணனை அத்வானி சந்தித்ததாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.
Comments
Story first published: Wednesday, September 13, 2000, 5:30 [IST]