For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காமராஜர் மணி மண்டபம் .. கருணாநிதி திறக்கிறார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக அரசின் சார்பில் கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள காமராஜர் மணிமண்டபத்தை முதல்வர் கருணநிதி அக்டோபர் 2-ம் தேதி திறந்து வைக்கிறார்.

மறைந்த தலைவர் காமராஜருக்கு கன்னியாகுமரியில் மணி மண்டபம் அமைக்கவேண்டும் என்று காங்கிரஸ், த.மா.கா. உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், சமுதாயஅமைப்புகளும் தமிழக அரசை வலியுறுத்தி வந்தன.

அதை ஏற்று கன்னியாகுமரியில் காமராஜருக்கு மணி மண்டபம் அமைக்க தமிழக அரசுகடந்த ஆண்டு உத்தரவிட்டது. அதன்படி கட்டி முடிக்கப்பட்டுள்ள மணி மண்டபத்தின்திறப்பு விழா காந்தி பிறந்த நாளும், காமராஜர் நினைவு நாளுமான அக்டோபர் 2-ம்தேதி நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி கலந்து கொள்வதை ஒட்டி, அக்டோபர் 1-ம்தேதி முதல் 3-ம் தேதி வரை நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில்பல்வேறு அரசு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

1-ம் தேதி காலை நடைபெறும் தூத்துக்குடி இந்தியத் தொழில் மற்றும் வர்த்தகச்சங்கத்தின் பவள விழா மற்றும் மாலையில் நடைபெறும் தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி தொடக்கவிழாவிலும் முதல்வர் பங்கேற்கிறார்.

இரவில் தி.மு.க.பணிமனையை அவர் திறந்து வைக்கிறார்.

2-ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகில் நம்பியாறு, ஆரல்வாய்மொழிபொய்கையாறு அணை திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார். மாலை 6 மணிக்குகன்னியாகுமரியில் மணி மண்டபத்தை திறந்து வைக்கிறார்.

3-ம் தேதி மாலை பாளையங்கோட்டை சட்டக் கல்லூரி கட்டடத்தை திறந்துவைக்கிறார். திருநெல்வேலியில் அமைக்கப்பட்டுள்ள காமராஜர் சிறையையும் திறந்துவைக்கிறார்.

இத்தகவலை தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X