தேர்தல் கமிஷனரை நீக்கினால் போராடுவோம் ..இலங்கை எதிர்க்கட்சிகள்
கொழும்பு:
தேர்தல் கமிஷனர் தயானந்த திசநாயகே மீது நடவடிக்கை எடுத்தால் பொதுத்தேர்தல் நடத்த விடாமல் போராட்டம் நடத்துவோம் என்று முக்கியஎதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்துக்கு அக்டோபர் 10 ம் தேதி பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் கள்ள ஓட்டைத் தடுப்பதற்காக அடையாளஅட்டை மீது ஸ்டிக்கர் ஒட்டும்படி தேர்தல் கமிஷனர் திசநாயகே உத்தரவிட்டார். அடையாள அட்டைகள் அச்சிடும் பணியை தனியார் அச்சகத்தினரிடம்ஒப்படைத்தார்.
இரண்டுக்கும் அவர் அதிபர் சந்திரிகாவிடம் அனுமதி பெறவில்லை. இதையடுத்து சந்திரிகா அரசு அதிருப்தியடைந்தது. அவர் மேல் நடவடிக்கைஎடுக்கப்போவதாகவும், இந்த விஷயங்கள் குறித்து விசாரணை நடத்தும்படியும் உத்தரவிட்டார்.
இதை ஐக்கிய தேசியக் கட்சியும், ஜனதா விமுக்தி பெருமுனாவும் கண்டித்துள்ளன. தேர்தல் கமிஷனருக்கு தேர்தல் குறித்த விவரங்களை எடுப்பதற்கு முழுஅதிகாரம் உள்ளது என்று அவ்விரண்டு கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன.
ஜனதா விமுக்தி பெருமூனா செய்தித் தொடர்பாளர் விமல் வீரவன்சா கூறுகையில் தேர்தல் கமிஷனர் மீது நடவடிக்கை எடுத்தால் தேர்தல் நடத்துவதில்அர்த்தமே இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். இந்த இரண்டு கட்சிகளும், தேர்தல் கமிஷனர் மீது நடவடிக்கை எடுத்தால் தேர்தல் நடத்த விடமாட்டோம்என்று கூறியுள்ளன.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications