பொருளாதாரத் தடையால் தேசப்பற்றுதான் அதிகரிக்கும் ..பிஜி அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

சுவா:

பிஜியில் பொருளாதாரத் தடை விதிப்பதால் நாங்கள் பாதிக்கப்பட மாட்டோம். மாறாக, தேசப் பற்றுத்தான் அதிகரிக்கும் என்று அந்நாட்டு தகவல்தொடர்பு அமைச்சர் ராட்டு க்யூபோலே வியாழக்கிழமை தெரிவித்தார்.

பிஜியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மகேந்திர பால் செளத்ரி பிரதமராக இருந்தார். கடந்த மே 19 ம் தேதி ஜார்ஜ் ஸ்பைட் தலைமையிலானபுரட்சிக்கும்பல் செளத்ரி உள்பட அவரது அமைச்சரவையிலுள்ள 29 பேரையும் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்தது. இதையடுத்து கலகம் வெடித்தது. பின்னர்ராணுவம் ஆட்சியைப் பிடித்தது.

பின்னர் புரட்சிக்கும்பலுக்கும், ராணுவத்துக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இப்பேச்சுவார்த்தையை அடுத்து பிஜியில் பிரதமர் செளத்ரி உள்படஅவரது அமைச்சரவை சகாக்கள் விடுவிக்கப்பட்டனர்.

புரட்சிக்கும்பல் தலைவர் ஜார்ஜ் ஸ்பைட் கைது செய்யப்பட்டார். அவர் மேல் தேசதுரோக வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில், பிஜியில் பொருளாதாரத் தடை விதிப்பதால், மக்களின் தேசிய உணர்வு அதிகரிக்குமே தவிர வேறு எந்தப் இழப்பும் ஏற்படாது. பிஜியில்வாழும் 4 லட்சம் மக்களுக்கும் பொருளாதாரத் தடை எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.

பிஜி மக்கள் தங்கள் உரிமைகளுக்கு அங்கீகாரம் கோருகிறார்கள். இந்த நிலையில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐரோப்பிய யூனியன் ஆகியோர்பொருளாதாரத் தடை விதிப்பதாக மிரட்டுகிறார்கள். ஆனால் இதையும் தாண்டி பிஜி மக்கள் சமாளிப்பார்கள்.

பணக்கார நாடுகள், பிஜி போன்ற சிறிய தீவுகள் மீது தங்களது ஆதிக்கத்தை திணிக்க முயலுகின்றனர். இதற்காகவே இந்த நாடுகள் கைகோர்க்கின்றனஎன்றார் அவர்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+