கர்நாடகத்தில் தமிழர் குடிசைகளுக்குத் தீவைப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

கர்நாடகத்தின் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில், இரண்டு தமிழர்களின் வீடுகளுக்குத்தீவைக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தமிழர்கள்தமிழகத்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

காவிரி நீர்ப் பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட வன்முறையின் பாதிப்பை தமிழர்கள்இன்னும் மறக்கவில்லை. இந்த நிலையில், நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திச்சென்றுள்ளதால், தமிழகத்தில் கன்னட வெறியர்கள் சிலர் தமிழர்கள் மேல் கோபம்அடைந்துள்ளனர். இதன் எதிரொலி பெங்களூரின் சில பகுதிகள் மற்றும் சாம்ராஜ் நகர்,மைசூர் ஆகிய மாவட்டங்களில் தெரிந்தது.

கன்னட தீவிரவாத அமைப்புகளின் போக்கு காரணமாக இதுவரை 40,000க்கும்மேற்பட்ட தமிழர்கள் தமிழகத்திற்கு இடம் பெயர்ந்து வந்துள்ளதாக தமிழக அரசுதெரிவித்துள்ளது. இந்த நிலையில் பயத்தில் உள்ள தமிழர்களுக்கு பீதியைக்கொடுப்பது போல மேலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

சாம்ராஜ் நகர் மாவட்டம் சித்தனபுரா என்ற கிராமத்தில், இரண்டு தமிழர்களின்குடிசைகளுக்கு தீவைக்கப்பட்டது. இதில் இரு குடிசைகளும் எரிந்து சாம்பலாயின.ராஜ்குமார் கடத்தல் பின்னணியாகவே இந்த சம்பவம் என்று அப்பகுதி தமிழர்கள்நினைக்கின்றனர். இந்த தீவிபத்தையடுத்து பல தமிழர் குடும்பங்கள் உடமைகளுடன்தமிழகத்திற்கு இடம் பெயர்ந்து சென்று விட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+