வாஜ்பாயை வரவேற்று அமெரிக்க நாடாளுமன்றம் தீர்மானம்
வாஷிங்டன்:
இந்தியப் பிரதமர் வாஜ்பாய் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளதற்குஅந் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது முழுமையான ஆதரவைத்தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
நியுயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் மில்லேனியம் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு தலைநகர் வாஷிங்டனுக்கு வியாழக்கிழமை வந்தார் வாஜ்பாய்.அங்கு அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
வியாழக்கிழமை முதல் அவர் தனது அமெரிக்காவுக்கான 4 நாள் அரசு முறைப்பயணத்தைத் தொடங்குகிறார். அவர் அமெரிக்காவில் சுற்றுப் பயணம்மேற்கொள்வதற்கான தங்களது முழுமையான ஆதரவை அமெரிக்க நாடாளுமன்றஉறுப்பினர்கள் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக நியுயார்க் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், நாடாளுமன்றத்தில்சர்வதேச உறவுகள் தொடர்பான கமிட்டியின் தலைவருமான பெஞ்சமின் கில்மேன்கொண்டுவந்த தீர்மானத்தை அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர்.
வாஜ்பாயியின் அமெரிக்கப் பயணம் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும்இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும். 6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப்பிரதமர் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
பயங்கரவாதத்துக்கு எதிராக இரு நாடுகளும் போராடவும், இரு நாடுகளுக்கும்இடையான உறவுகள் தொடர்பாக நடைபெறும் பேச்சுவார்த்தையை மேலும்விரிவுபடுத்தவும் வேண்டியதன் அவசியத்தை வாஜ்பாய் வலியுறுத்தியுள்ளது மிகவும்குறிப்பிடத்தக்கது.
இரு நாட்டு அரசுகளும் சட்டத்தின் படி நடந்து சட்டத்தைக் காக்கவும், ஜனநாயகம்மற்றும் மதச் சுதந்திரத்தைக் காக்கவும் போராடும் என்பது உறுதி என்று தீர்மானத்தைஅறிமுகப்படுத்தி பேசிய கில்மேன் தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.