ரயிலிலிருந்து குதித்து ராணுவ மேஜரின் மனைவி தற்கொலை
டெல்லி:
தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ராணுவ மேஜரின் மனைவி ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
காஷ்மீரிலுள்ள பீர்வா அருகேயுள்ள பட்காம் பகுதியில் லஸ்கார் இ தொய்பா தீவிரவாதிகளால், மேஜர் பாண்டே என்பவரும், 10 ராணு வீரர்களும்செப்டம்பர் 11 ம் தேதி கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட பாண்டேவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள மனைவி ஜெயா பாண்டே, அவரது மாமனார், பிற குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர்பஞ்சாப் மாநிலம் பாதன்கோட்டிலிருந்து உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்துக்கு புதன்கிழமை ரயிலில் சென்றனர்.
சொந்த ஊரான அலகாபாத்துக்கு, மேஜர் பாண்டேவின் உடல் தகனத்திற்காக புதன்கிழமை கொண்டுவரப்பட்டு இறுதிச் சடங்குகள் நடத்தப்படுவதாகஇருந்தது.
ரயில் டெல்லி அருகேயுள்ள தாத்ரி பகுதியில் வந்து கொண்டிருந்த போது ஜெயா, கழிவறைக்குச் செல்வதுபோல் எழுந்து சென்றார். கணவரின் பிரிவைத்தாங்கிக்கொள்ள முடியாமல் கதறி அழுது கொண்டே அவர் ஓடும் ரயிலிருந்து கீழே குதித்தார். உடனடியாக அவரது உறவினர்கள் அங்கு வந்து ரயிலில்உள்ள சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். ஆனாலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
இதுகுறித்து உடனடியாகப் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸார் அங்கு விரைந்து சென்று ஜெயாவின் சடலத்தை மீட்டனர். ஜெயாவுக்கும்,ராணுவ அதிகாரி பாண்டேவுக்கும் 1998 ம் ஆண்டு திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications