சென்னை ரயில் நிலையத்தில் பயணிகள் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள ரயில் பாதையில் 200 க்கும் மேற்பட்ட ஆண் பயணிகள் அமர்ந்து கொண்டு போராட்டம் நடத்தியதில் மின்சாரரயில் போக்குவரத்து வெள்ளிக்கிழமை சுமார் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து ரயில்வே போலீஸார் கூறுகையில், எலக்ட்ரிக் ரயில்களில் பெண்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்திருந்த அவர்கள்அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதையடுத்து அவர்கள் பெண்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் தாங்களும் அமர்ந்து பயணம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிபோராட்டம் நடத்தினார்கள் என்றனர். சம்பவம் நடந்த எழும்பூர் ரயில் நிலையத்திற்குச் சென்று அவர்களைக் கலைத்து விட்டனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications