For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூ.60 லட்சம் மோசடி செய்தவர் கம்பி எண்ணுகிறார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வங்கியில் போலி ஆவணங்களைக் கொடுத்து ரூ. 60 லட்சம் கடன் வாங்கிஏமாற்றியவர் கைது செய்யப்பட்டார்.

இது பற்றிக் கூறப்படுவதாவது:

சென்னை மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (40). இவர்தேர்டு பிளாநட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தைநடத்தி வந்தார்.

இவர் மாம்பலத்தில் உள்ள கரூர் வைஸ்யா வங்கியை அணுகி தனக்கு கர்நாடகமாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையை செப்பனிடும் பணிக்கான ஒப்பந்தம்கிடைத்துள்ளது என்றும் அந்த பணிக்காக 14 கோடியே 2 லட்சத்து 88 ஆயிரத்து 480ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்றும் கூறி அதற்கான ஆவணங்களைச்செலுத்தி 60 லட்ச ரூபாய் கடன் பெற்றார்.

கடன் வாங்கிய அவர் கட்டவேண்டிய தவணைத் தொகைகளைக் கட்டாமல் தவிர்த்துவந்தார். இதையடுத்து வங்கி மேலாளர் சத்தியமூர்த்தி, கர்நாடக மாநிலநெடுஞ்சாலையைத் தொடர்பு கொண்டு பாலசுப்ரமணியன் பற்றி விசாரித்தார்.

அப்போது பாலசுப்பிரமணியத்துக்கும் கர்நாடக நெடுஞ்சாலைத் துறைக்கும் அதுபோன்ற ஒப்பந்தம் எதுவும் இல்லை என தெரியவந்தது. இதையடுத்து கடன் வாங்கபாலசுப்பிரமணியம் கொடுத்த ஆவணங்களைப் பரிசோதித்த போது அவைஅனைத்தும் போலி என தெரியவந்தது.

உடனே போலீஸில் சத்தியமூர்த்தி புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில்சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பாலசுப்ரமணியத்தை கைது செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X