கேரளாவிற்கு கடத்தப்பட்ட 128 மாடுகள்
சென்னை:
ஆந்திராவிலிருந்து தமிழகம் வழியாக கேரளாவிற்கு மாடுகளை கடத்திய கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். ஆறுலாரிகளில் கடத்தப்பட்ட, ஐம்பது லட்சம் மதிப்புள்ள 128 மாடுகளையும் போலீஸார் கைப்பற்றினர்.
தமிழகம், ஆந்திர மாநிலங்களில் இருந்து கேரளாவிற்கு லாரிகளில் மாடுகள் கடத்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.ஆந்திர மாநிலம் ஓங்கோலிலிருந்து தமிழகம் வழியாக கேரளாவிற்கு லாரிகளில் இந்தக் கடத்தல் நடந்து வருகிறது.
இந் நிலையில் ஓங்கோலிலிருந்து 128 மாடுகளை கும்பல் ஒன்று ஆறு லாரிகளில் ஏற்றிக் கொண்டு திருவள்ளூர், சென்னை,பொள்ளாச்சி வழியாக கேரளாவிற்கு கடத்திச் சென்று கொண்டிருந்தது.
திருவள்ளூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் சென்ற போலீஸார் லாரிகளை வழிமறித்து சோதனையிட்டனர். மாடுகளைலாரிகளில் அடைத்து கேரளாவிற்கு கடத்திச் சென்ற கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ராஜேந்திரன், ரங்கசாமி, சேகர், ராதாகிருஷ்ணன்,மணி,ராமசிவம் ஆகிய ஆறு பேரையும் கைது செய்தனர்.
போலீஸார் பிடித்த மாடுகளை, நாசரேத் அருகேயுள்ள ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆயுர்வேத கல்லூரியில் உள்ளகோசாலைக்கு கொண்டு சென்றனர். கைது செய்யப்பட்ட ஆறு பேர் மீதும் பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள்பதிவு செய்யப்பட்டுள்ளது.