ஆண்கள் துப்பாக்கி சுடும் பிரிவு: 27-வது இடத்தில் இந்திய வீரர்
சிட்னி:
ஆண்கள் மென்ஸ் டிராப் பிரிவில் இந்திய வீரர் அன்வர் சுல்தான் 27-வது இடம்பிடித்துள்ளார்.
சனிக்கிழமை தொடங்கிய இப் பிரிவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 40 பேர் கலந்துகொண்டனர். முதல் சுற்றின் முடிவில் ஆஸ்திரேலியாவின் மைக்கேல் டயமண்ட்முதலிடத்தில் உள்ளார். அவர் 75-க்கு 72 புள்ளிகள் எடுத்துள்ளார்.
இந்திய வீரர் அன்வர் சுல்தான் 75-க்கு 63 புள்ளிகளுடன் 27-வது இடத்தில் உள்ளார்.ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது சுற்று நடைபெறுகிறது.
இப் பிரிவில் இந்தியா சார்பில் அன்வர் சுல்தான் மட்டுமே கலந்து கொண்டார்.இதையடுத்து இப் பிரிவில் இந்தியாவுக்குப் பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு மிகமிகஅரிதாகவே உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இரண்டாவது சுற்றில் மொத்தம் 150 புள்ளிகளுக்குப்போட்டி நடைபெறும். இதில் அன்வர் சுல்தான் அதிக புள்ளிகள் எடுத்தாலும், பதக்கம்கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை.
இரு சுற்றுகளின் முடிவில் முதல் 8 இடங்களைப் பிடிப்பவர்கள் இறுதிச் சுற்றுக்குமுன்னேறுவார்கள். முதல் 8 இடங்களில் அன்வர் சுல்தான் இடம்பெறுவது மிகவும் கடினம்என்று கூறப்படுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications