திருவண்ணாமலை கோயிலில் கார்த்திகை தீப விழா செப். 20-ல் தொடக்கம்

Subscribe to Oneindia Tamil

திருவண்ணமலை:

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப விழா இம் மாதம் 20-ம்தேதி தொடங்குகிறது.

ஆண்டுதோறும் அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப விழா வெகு சிறப்பாகக்கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் கார்த்திகை தீப விழா கொண்டாடப்படஉள்ளது.

அதற்கான முன்னேற்பாடு நிகழ்ச்சிகள் அருணாசலேஸ்வரர் கோயிலில் தொடங்கப்பட உள்ளன. முதல்நிகழ்ச்சியாக வரும் புதன்கிழமை (செப்டம்பர் 20) அதிகாலை 3 மணிக்கு கோயிலின் நடைதிறக்கப்படும்.

பின்னர் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலை அம்மன் மற்றும் கோயில் வளாகத்தில் உள்ள மற்றசுவாமிகளுக்கும் சிறப்பு ஆராதனை, அபிஷேகங்கள் நடத்தப்படும்.

அதற்குப் பிறகு கோயில் வளாகத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதிக்கு முன்பு பந்தக்கால் கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்படும்.

காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் மேள, தாளத்துடன் கோயிலுக்குள் இருந்து பந்தக்கால் வெளியேகொண்டு வரப்பட்டு பெரிய தேருக்குக் கொண்டு செல்லப்படும். பிறகு மற்ற தேர்களுக்கும் பூஜைசெய்யப்படும்.

இறுதியாக ராஜ கோபுரம் முன்பு பந்தக்கால் நடப்படும். இந் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானபக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து கார்த்திகைதீப விழா பணிகள் முழு வீச்சில் நடைபெறும்.

அருணாசலேஸ்வரர் கோயிலில் இருந்த கொடிமரம் சில மாதங்களுக்கு முன்பு வீசிய சூறாவளிக் காற்றில்சாய்ந்துவிட்டது. அந்த மரம் அகற்றப்பட்டு வேறு ஒரு கொடி மரம் வைக்கப்பட்டுள்ளது.

புதிய கொடி மரத்துக்காக கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து 72 அடி உயர கொடிக் கம்பம் கொண்டுவரப்பட்டுள்ளது. கார்த்திகை தீபத்துக்கு முன்பு இப் புதிய கொடி மரத்தை நிறுவ கோயில் நிர்வாகிகள்திட்டமிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+