தீவிரவாதத்தைத் தடுக்க இந்தியா-அமெரிக்கா விரைவில் ஒப்பந்தம்
வாஷிங்டன்:
தெற்காசியாவில் நிலவும் பதற்றத்தைப் போக்க தெற்காசிய நாடுகளால் தான் முடியும் என இந்தியாவும்அமெரிக்காவும் கூறியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள இந்தியப் பிரதமர் வாஜ்பாயும், அமெரிக்க அதிபர் கிளின்டனும் வெளியிட்ட கூட்டுஅறிக்கையில்,
பிரச்சனைகளை தீவிரவாதம், வன்முறை மூலம் தீர்ப்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அமைதிக்காக அனைத்துவகையிலும் ஒத்துழைக்க இந்தியா தயார். சர்வதேச பயங்கரவாதத்தைத் தடுக்க உலக நாடுகள் அனைத்தும்இணைந்து முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
இந்தியாவும், அமெரிக்காவும் தான் தீவிரவாதம், பயங்கரவாதத்துக்கு தொடர்ந்து இலக்காகி வருகின்றன. இதைமுறியடிக்க இரு நாடுகளும் மேலும் நெருக்கமாக இணைந்து செயல்படும்.
தீவிரவாதத்தை ஒடுக்குவது குறித்து இரு நாடுகளும் அடுத்த மாதம் டெல்லியில் மீண்டும் ஆலோசனை நடத்தும்.தீவிரவாதத்தைத் வெல்ல இரு நாடுகளும் ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்ளும். இதற்காக ஒரு சிறப்புஒப்பந்தமும் செய்து கொள்ளப்படும்.
அணு ஆயுதப் பரவல் சட்டத்தைப் பொறுத்தவரை தொடர்ந்து இரு நாடுகளும் பேச்சு நடத்தும். இனி அணு ஆயுதசோதனையை இந்தியா நடத்தாதது. ஆனால், நாட்டின் பாதுகாப்புத் தேவைக்கு ஏற்ப இதில் மாற்றம் இருக்கும்.
அணு ஆயுதத்துக்குத் தேவையான கதிரியக்க மூலப்பொருள் தயாரிப்பைத் தடுக்கும் ஒப்பந்தத்துக்கு இந்தியாஆதரவு தெரிவிக்கிறது.
இரு நாடுகளுக்கும் இடையே உறவை வலுப்படுத்த உதவி வரும் அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியர்களுக்குபாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்த கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.