ராஜ்குமார்: கர்நாடக கேபிள் டிவிக்கள் வேலைநிறுத்தம்
பெங்களூர்:
ராஜ்குமார் விடுதலை தாமதமாவதை எதிர்த்து கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்துகேபிள் டி.வி. உரிமையாளர்கள் இம்மாதம் 24-ம் தேதி கேபிள் டி.வி.ஒளிபரப்பைநிறுத்திவைக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
சந்தனக் கடத்தல் வீரப்பனால் பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் கடந்த மாதம் 30-ம்தேதி கடத்தப்பட்டார். அவர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. சட்டச்சிக்கலால் ராஜ்குமார் விடுதலை ஆவது தாமதமாகி வருகிறது.
இதைக் கண்டித்து கர்நாடக கேபிள் டிவி நிறுவனத்தினர் 24-ம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
இந்த வேலைநிறுத்தத்தில் கர்நாடக கேபிள் டி.வி இயக்குநர் சம்மேளனம், கர்நாடககேபிள் டிவி இயக்குநர் சங்கம், கர்நாடக கேபிள் டிவி இயக்குநர் நல சங்கத்தினர்ஆகியோரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
ஏற்கெனவே ராஜ்குமார் கடத்தப்பட்டபோது கர்நாடகம் முழவதும் இரண்டுநாட்களுக்கு கேபிள் டிவி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications