பசுக்களை கொல்வதை எதிர்த்து ஊர்வலம்
சென்னை:
பசுவதையை எதிர்த்து சென்னையில் நடந்த ஊர்வலத்தில் ஜயேந்திர சரஸ்வதிஸ்வாமிகள் கலந்து கொண்டார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள சிவா விஷ்ணு கோவலில கோமாதா பூஜையில்ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் கலந்து கொண்டார். அதில் மத்திய அமைச்சர்பாலாசாகேப் விக்கே பாட்டீலும் கலந்து கொண்டார்.
கேமாதா பூஜையைத் தொடர்ந்து நடந்த பசுவதைக்தடுப்பு ஊர்வலத்தில் ஜயேந்திரசரஸ்வதி ஸ்வாமிகளும், விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும் நடந்து சென்றனர்.
இந்த ஊர்வலம் சென்ற பாதையில் மாணவ, மானவிகள் திரண்டு நின்று பசுவதையைஎதிர்த்து கோஷம் எழுப்பினர். ஊர்வலம் நுங்கம்பாக்கம் வைணவ மகளிர் கல்லூரியைஅடைந்தது.
பின்னர் அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்பேசியதாவது:
இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில்தான் பசுமாடுகள்அதிக அளவில கொல்லப்படுகின்றன. வியாபாரத்திற்காக பசுக்களைக் கொல்கின்றனர்.
பசவதை தடை சட்டம் கொண்டு வந்தால்தான் பசுக்கள் கொல்வதைத் தடுக்க முடியும்.பசுக்கள் காப்பகம் மூலம் பசுக்களை பாதுகாக்க வேண்டும். அதற்கு பொதுமக்கள்பொருளுதவி செய்ய வேண்டும்.
ஒவ்வொருவரும் ஒரு ரூபாய் கொடுத்தால் கூட போதும். ஒவ்வொரு வீட்டிலும் மாடுவளர்க்க வேண்டும் என்றார் அவர்.
மத்திய அமைச்சர் பேசுகையில் பசுவதையைத் தடுக்க ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்சொன்ன அறிவுரைகளை பின்பற்றி நடக்க வேண்டும் எனக் கூறினார்.