கூட்டணியில் குழப்பமில்லை - இளங்கோவன்
சென்னை:
தமிழகத்தில் அ.தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் எந்த விதமான குழப்பமும் இல்லை எனதமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமையன்று பெரியார் பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணாசாலையில்உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். அதன் பின்பு நிருபர்களுக்கு அவர்அளித்த பேட்டி:
காளிமுத்து எங்களை தாக்கி அறிக்கை விடுத்தது சின்ன விஷயம் என ஜெயலலிதாசொல்லியிருப்பதால் இதை பெரிய விஷயமாக நினைத்து பேச வேண்டியதில்லை.இனிமேல் அ.தி.மு.க.வில் இருந்து கண்டன அறிக்கைகள் வராது என நினைக்கிறேன்.
அ.தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் எந்த விதமான குழப்பமும் இல்லை. மதவாதசக்திகளை எதிர்ப்பதில் அனைவரும் ஓரணியில் திரண்டுள்ளோம்.
பெரியார் விழா நாளன்று டில்லியில் மனித உரிமை கழகம் நடத்தும் விழாவில் சோனியாகலந்து கொள்ள இருப்பதால் அவரால் பெரியார் விழாவில் கலந்து கொள்ள இயலாதுஎன்றார் அவர்.












Click it and Unblock the Notifications