மம்தாவின் எண்ணத்தை முறியடிப்போம்: கம்யூனிஸ்ட்
கோயம்புத்தூர்:
மேற்குவங்க முதல்வராக வேண்டும் என்ற ஆசையில்தான் அங்கு ஜனாதிபதி ஆட்சியைஅமல்படுத்த வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கூறுகிறார்என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுபினர் குருதாஸ் தாஸ் குப்தா குற்றம்சாட்டியுள்ளார்.
கோவையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
மம்தா பானர்ஜிக்கு மேற்கு வங்காள முதல்வராக வேண்டும் என்ற ஆசை வந்து விட்டதுஅதனால்தான் அவர் மேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல் படுத்த வேண்டும்என கேட்டு வருகிறரர்.
மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசு அரசியல் திட்டத்தின் 356-வது பிரிவை எதிர்த்துவருகிறது. மத்திய அரசு அந்த அரசியல் பிரிவை பயன்படுத்தாது என நம்புகிறோம். மேற்குவங்க அரசை 356-வது பிரிவை பயன்படுத்தி கலைத்தாலும் மீண்டும் மக்கள் ஆதரவால்ஆட்சிக்கு வருவோம்.
மம்தா பானர்ஜியின் எண்ணத்தை அவைரும் ஒற்றுமையாக இருந்து எதிர்கொண்டுமுறியடிப்போம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications