For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீண்டும் பெட்ரோல் விலை உயரும்?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து பிரதமர் வாஜ்பாய் இந்தியா திரும்பியதும் மத்திய அமைச்சரவைக் கூடி முடிவெடுக்கும்என்று மத்திய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் பொன்னுசாமி தெரிவித்தார்.

கடலூரில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்துவது குறித்து மத்திய அமைச்சரவை தான் இறுதி முடிவெடுக்கவேண்டும். பிரதமர் வாஜ்பாய் இந்தியா திரும்பியதும் 21ம் தேதி வாக்கில் மத்திய அமைச்சரவை கூடி, இதுபற்றி இறுதிமுடிவெடுக்கும்.

கச்சா எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்துமாறு அமெரிக்காவை நாம் வற்புறுத்தி வருகிறோம். கச்சா எண்ணெய் விலைகட்டுப்படுத்தப்பட்டால் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை ஓரளவு சமாளிக்க முடியும்.

இந்திய எண்ணெய் தொகுப்பு நிதி ரூ.9,000 கோடி என்ற அளவில் உள்ளது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X