ஹெராயின் கடத்திய கிராம அதிகாரி!
திருச்சி:
திருச்சியில் ரூ 15 லட்சம் மதிப்புள்ள ஹெராயினைக் கடத்தியது தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் பெயர்: நல்லப்பன் (53) கிராம நிர்வாகி, ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள மஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர். செல்வம் (33) சேலம். ராஜா(42) சேலம். கருப்பசாமி (50) சேலம்.
இவர்களிடமிருந்து 150 கிராம் ஹெராயின் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சர்வதேச மார்க்கெட்டில் இந்த போதை பொருட்களின் மதிப்பு ரூ15 லட்சம் ஆகும். கைது செய்யப்பட்ட இவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த போதைப்பொருட்களை மும்பையிலிருந்து கடத்தி வரப்பட்டதாக வாக்குமூலம் அளித்தனர்.
கஞ்சா செடி அழிப்பு:
இந் நிலையில் தேனியில் காட்டுப் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
தேனி அருகிலுள்ள அகமலை காட்டுப்பகுதியில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் இந்தச் செயிதள் பயிரிடப்பட்டிருந்தன. இவற்றை போலீஸார் அழித்தனர்.அழிக்கப்பட்ட கஞ்சா செடிகளின் மதிப்பு ரூ 20 லட்சம் ஆகும்.