மக்கள் தலைவர் மூப்பனார்: நூல் வெளியிடுகிறது தமாகா
சென்னை:
இரு மாநில காங்கிரஸ் முதல்வர்கள், தோழமைக் கட்சித் தலைவர்களை அழைத்து 20ம் தேதி நூல் வெளியீட்டு விழா என்ற பெயரில் மிகப் பெரிய அரசியல்விழா ஒன்றை நடத்துகிறது தமாகா.
தமாகா செய்தித் தொடர்பாளர் கோபண்ணா தொகுத்து வெளியிட்டுள்ள ""மக்கள் தலைவர் மூப்பனார் எனும் நூல் வெளியீட்டு விழா 20ம் தேதி புதன்கிழமைசென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெறுகிறது.
புதுவை முதல்வர் சண்முகம் தலைமை வகிக்கிறா. சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.அழகிரி வரவேற்புரை ஆற்றுகிறார். மகாராஷ்ட்ர மாநில காங்கிரஸ்தலைவர் முரளி தியாரே குத்து விளக்கேற்றுகிறார். மூப்பனாரின் சகோதரர் ஜி.ஆர்.மூப்பனார் விருந்தினர்களை கவுரவிக்கிறார்.
மகாராஷ்ட்ரா முதல்வர் விலாஸ் ராவ் தேஷ்க் நூலை வெளியிடுகிறார். முன்னாள் ஆந்திர முதல்வர் ஜனார்த்தன ரெட்டி முதல் பிரதியை பெற்றுக்கொள்கிறார்.
தமா.கா. பொதுச் செயலாளர் தமிழருவிமணியன் நூலை திறனாய்வு செய்கிறார் தி.க.தலைவர் கி.வீரமணி, அதிமுக இலக்கிய அணிச் செயலாளர் புலமைப்பித்தன்,தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், மார்க்சிஸ்ட் தலைவர் என்.வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் நல்லகண்ணு, விடுதலை சிறுத்தைகள்அமைப்பாளர் திருமாவளவன், ராஷ்ட்ய ஜனதா தள தலைவர் ஜெகவீரபாண்டியன், துக்ளக் ஆசிரியர் சோ.ராமசாமி, எழுத்தாளர் ஜெயகாந்தன், இயக்குனர்பாரதிராஜா மற்றும் புதுவை அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
இத்தகவலை தமாகா அறிக்கை தெரிவிக்கிறது.