ராம்தாஸ் மீது தாக்குதல்: புதுவையில் பந்த்
புதுவை:
புதுவையில் ஞாயிற்றுக்கிழமை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்ற கார் தாக்கப்பட்டதைக் கண்டித்து பா.ம.க.முழு அடைப்புக்குஅழைப்பு விடுத்துள்ளது. இந்த பந்திற்கு முழு ஆதரவு கிடைத்துள்ளது.
இந்த முழு அடைப்பையடுத்து புதுவையில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அளிக்க புதுவை அரசு உத்தரவிட்டுள்ளது.
சாலைகள் பஸ் போக்குவரத்தின்றி வெறிச்சோடிக் கிடந்தன. சாலைகளில் பஸ், டாக்சி, ஆட்டோக்கள் எதுவும் ஓடவில்லை. கடைகள் எதுவும்திறக்கப்படவில்லை. அரசு அலுவலகங்களில் சொற்ப ஊழியர்களே வந்துள்ளனர்.
முன்னதாக, டாக்டர் ராமதாஸ் சென்ற கார் தாக்கப்பட்ட அபிஷேகப்பாக்கம் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது. உயர் போலீஸ் அதிகாரிகள் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக 200 க்கும்மேற்பட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அபிஷேகப்பாக்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் கொடியேற்ற முயன்றபோது 1000 க்கும் மேற்பட்ட கும்பல் ஒன்றுஅவர் சென்ற கார் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியது. இதில் ராமதாஸ் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
அவருடன் வந்த புதுவை பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மஞ்சினி உள்பட 15 பேர் காயமடைந்தார். இச்சம்பவத்திற்கு விடுதலை சிறுத்தைகள்தான்காரணம் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் கொடுத்த புகாரையடுத்து போலீஸார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications