4 மாதத்தில் 2,758 சாலை விபத்துகள்- 3,007 சாவுகள்
சேலம்:
2000 மாவது ஆண்டு தமிழகத்தில் நடந்த சாலை விபத்துக்களில் 3007 பேர் இறந்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 2 ஆயிரத்து 758 விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் டிரைவர்களின் கவனக்குறைவால் நடந்த விபத்துக்களின்எண்ணிக்கை 2 ஆயிரத்து 663.
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் டிரைவர்களின் கவனக்குறைவினாலேயே விபத்துக்கள் ஏற்படுகின்றன. ஒரு சில டிரைவர்களைத் தவிர பெரும்பாலானடிரைவர்கள் குடித்துவிட்டே பஸ்சை ஓட்டுகின்றனர்.
காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிக்கு வரும் லாரி, பஸ் டிரைவர்கள் குடித்துவிட்டுத்தான் பஸ் அல்லது லாரியை ஓட்டுகின்றனர். இதனால் நாளுக்குநாள்விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. இதனால் பலியாவது அப்பாவி மக்கள்தான்.
தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் (சேலம் பிரிவு):
தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சேலம் கோட்டம்: 2 வெளியிட்டுள்ள அறிக்கை:
97-98ம் வருடம்: 419 விபத்துக்கள்: 66 பேர் பலி.
98-99 ம் வருடம்: 423 விபத்துக்கள்: 71 பேர் பலி.
தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சேலம் கோட்டம்:1 வெளியிட்டுள்ள அறிக்கை:
97-98ம் வருடம்: 757 விபத்துக்கள்: 97 பேர் பலி.
98-99 ம் வருடம்: 681 விபத்துக்கள்: 114 பேர் பலி.
தனியார் பஸ் விபத்துக்கள் குறைவே:
அரசு பஸ்கள் ஏற்படுத்திய விபத்துக்களை விட தனியார் பஸ்கள் ஏற்படுத்திய விபத்துக்கள் மிகக் குறைவுதான்.
லைசென்ஸ் ரத்து ஆணை:
விபத்துக்களை தடுத்து நிறுத்துவதற்காக தமிழக அரசு கடந்த ஜனவரி 14 ம் தேதி லைசென்ஸ் ஆணையைப் பிறப்பித்தது.
அதன்படி, விபத்துக்களை ஏற்படுத்திய டிரைவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் லைசென்ஸ் பறிக்கப்படும்.
நடந்த விபத்துக்கு டிரைவர்கள்தான் காரணம் என்று தெரிய வந்தால் அந்த டிரைவர்களின் லைசென்சை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவோ அல்லது ரத்துசெய்யவோ செய்யப்படும் என்று ஆணை பிறப்பித்தது.
இதை எதிர்த்து போக்குவரத்துக் கழகங்களின் தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தியது. இதையடுத்து லைசென்ஸ் ஆணை வாபஸ் பெறப்பட்டது.
தமிழகத்தில் கவனக்குறைவாக வண்டி ஓட்டி ஒருவரோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டோரோ இறக்க நேர்ந்தால் அந்த பஸ் அல்லது லாரியின்டிரைவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.
அப்படி ஆஜர்படுத்தப்படும் டிரைவர் ரூ 5000 முதல் 8000 வரை அபராதம் கட்டினால் வெளியே வந்துவிடும் நிலை உள்ளது. அவர்கள் விபத்தும்ஏற்படுத்தும் விதம் மற்றும் வண்டி ஓட்டிய விதத்தைப் பொறுத்து அபராதத் தொகை மாறுபடும்.
தண்டனை அவசியம்:
பிற மாநிலங்களில் விபத்து ஏற்படுத்தினால் அந்த விபத்தில் தொடர்புடைய டிரைவர்களுக்கு ஒரு மாத சிறைத்தண்டனை அளிக்கப்படுகிறது.
ஆனால் தமிழ்நாட்டில் இதே போல் சிறைத்தண்டனை அளிக்கப்படவில்லை. தமிழக அரசு தலையிட்டு விபத்து ஏற்படுத்தும் டிரைவர்களுக்கு குறைந்தபட்சம்ஒரு மாதமாவது சிறைத் தண்டனை அளிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications