பிரேஸில் நாட்டில் ஒரே நாளில் 206 கைதிகள் தப்பியோட்டம்
சாவோ பாலோ:
தென் அமெரிக்க நாடான பிரேஸில் நாட்டில் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 206கைதிகள் தப்பியோடிவிட்டனர்.
துப்பாக்கி ஏந்திய கமாண்டோக்கள் அதிரடியாக சிறைகளில் நுழைந்து கைதிகளைவிடுவித்தனர். சாவோ பாலோ நகரில் உள்ள 3 சிறைகளில் திங்கள்கிழமை இச்சம்பவங்கள் நடந்தன.
சுமேர் என்ற பகுதியில் உள்ள சிறைக்குள் ஆயுதம் தாங்கிய 10 கமாண்டோக்கள்சிறைக்குள் நுழைந்து அங்கு அடைக்கப்பட்டிருந்த கொடிய கைதிகள் 92 பேரைவிடுவித்தனர்.
இதேபோல் மற்ற இரு சிறைகளில் இருந்து மொத்தம் 114 கைதிகள்விடுவிக்கப்பட்டனர்.
பிரேஸில் நாட்டில் சிறைகளில் இருந்து கைதிகள் தப்பிப்பது அன்றாடம் நடக்கும்சம்பவமாகும். ஆனால் ஒரே நாளில் கொடிய கைதிகள் உள்பட 206 பேர்ஒட்டுமொத்தமாக தப்பியிருப்பது இதுவே முதல் முறை.
தப்பிச் செல்ல முயன்ற கைதிகளைத் தடுக்க முயன்ற ஒரு போலீஸ் அதிகாரிதாக்கப்பட்டு படுகாயமடைந்தார். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கைதிகள் தப்பிச் சென்றது குறித்து தகவல் கிடைத்ததும் சாவோ பாலோ நகரம்முழுவதும் போலீஸார் தேடுதல்வேட்டை நடத்தினர். இதில் தப்பித்த கைதிகளில் 13பேர் மட்டுமே மீண்டும் பிடிபட்டனர்.
சாவோ பாலோவில் உள்ள சிறைகளில் 10 ஆயிரம் கைதிகளை மட்டுமே அடைத்துவைத்திருக்கமுடியும். ஆனால், கொள்ளளவை விட இரு மடங்குக்கும் மேலாக அங்குகைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனால், சிறைக்குள் வன்முறைச் சம்பவங்களும், கைதிகளிடையே அடிக்கடிமோதலும் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் பிரேஸில் சிறைகளுக்குச் சென்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கமிஷன் குழுவின் தலைவர் நைகல் ராட்லி, பிரேஸில் சிறைகளைப் போல ஒருகொடுமையான, மோசமான சிறைகளை உலகில் வேறு எங்கும் பார்த்ததில்லை என்றுகூறியுள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications