நீதிமன்றத்தை எட்டிய அதிமுக-காங்கிரஸ் லடாய்
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுக்கும், அதிமுகவுக்கும் இடையே நடைபெற்று வந்த அறிக்கை போர் இப்போது நீதிமன்றவிவகாரமாகி விட்டது.
அதிமுக பற்றி இளங்கோவன் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் வழக்குத்தொடரப்பட்டுள்ளது. இளங்கோவன் மன்னிப்புக் கேட்க வேண்டும் இல்லையேல் மானநஷ்ட ஈடு வழக்குத் தொடரப்படும் என்று அந்தமனுவில் அதிமுக கூறியுள்ளது.
சந்தன வீரப்பன் விவகாரத்தில் இளங்கோவனும், அதிமுக அவைத் தலைவர் காளித்துவும் அறிக்கைகள் மூலம் விளாசிக் கொண்டனர். ஒருகட்டத்தில் இளங்கோவனை கடுமையாக எச்சரித்த காளித்து, "இப்படியெல்லாம் பேசினால் வெளியில் நடமாட முடியாது என்றுகூறியிருந்தார்.
அதற்கு பதிலடி கொடுத்த இளங்கோவன், "ஒருவேளை தர்மபுரியில் பஸ்சில் சென்ற விவசாயக் கல்லூரி மாணவிகள் உயிருக்கு உத்தரவாதம்இல்லாதபோது, நான் நடமாடினால் எனக்கும் ஏதாவது ஆகிவிடுமோ என்ற நல்லெண்ணத்தில் காளித்து அவ்வாறு கூறியிருக்கலாம்.ஆனால், நான் விவசாயக் கல்லூரி மாணவி அல்ல என்று கிண்டலாக தாக்கியிருந்தார்.
(ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டதைக் கண்டித்து ஒரு கும்பல் வைத்த நெருப்பில் அந்த மாணவிகள் எரிந்துபோனவேதனைச் சம்பவத்தை நினைவுகூர்க)
இதை ஆட்சேபித்து காளித்து மீண்டும் அறிக்கை வெளியிட்டார். அதன் பிறகும் அதிமுகவின் ஆவேசம் அடங்கவில்லை. அதிமுகவின்வழக்கறிஞர் பிரிவு சார்பில் பிலிப்தாமஸ் என்பவர், இளங்கோவன் இப்படி சொன்னதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மனுத் தாக்கல்செய்துள்ளார்.
தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது. இந்நிலையில் பஸ் எரிப்பில் மாணவிகள்பலியான சம்பவத்திற்கு அதிமுக தான் காரணம் என்பது போல் இளங்கோவன் தெரிவித்திருப்பது அவதூறானது என்று மனுவில்கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications