நரபலி ஆசிரமம் புல்டோசர் மூலம் இடிப்பு
மதுரை:
மதுரை நரபலி சாமியாரின் ஆசிரமம் "புல்டோசர் உதவியுடன் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
அங்குலம் அங்குலமாக தோண்டிப் பார்த்தும் எந்த பிணம் கிடைக்கவில்லை.
30க்கும் மேற்பட்டவர்களை நரபலி கொடுக்கப்பட்ட அழகாபுரி ஆசிரமத்தில் பிணங்கள் புதைக்கப்பட்டுள்ளனவா என்பதை கண்டறியும்பணி இரண்டு நாட்களாக நடைபெற்றது.
சி.பி.சி.ஐ.டி. போலீசார் முதலில் கம்பிகள் மூலம் துளையிட்டு பிணங்கள் இருக்கிறதா என்று சோதனையிட்டனர். அதில் எந்த தடயமும்கிடைக்கவில்லை.
சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை கண்காணிப்பாளர் சுந்தரராஜன், தடயவியல் துறை துணை இயக்குனர் விஜயகுமார், போலீஸ் துணைகண்காணிப்பாளர் நாராயணசாமி, மதுரை அரசு மருத்துவமனை டாக்டர் தியாகராஜன் ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டனர்.
இதில் பொதுமக்களுக்கு திருப்தி ஏற்படவில்லை. எதிர்ப்பு தெரிவித்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் தோண்டும் பணி பாதியில்நிறுத்தப்பட்டது. செவ்வாய்கிழமை காலை டி.ஐ.ஜி. ஜாங்கிட், ஆர்.டி.ஓ. நந்தகோபால் ஆகியோர் முன்னிலையில் மீண்டும் தோண்டும் பணிதொடங்கியது.
ஆசிரமக் கூரையை முதலில் அப்புறப்படுத்தினர். பிறகு பூஜை அறையில் இருந்த காளி மற்றும் சுவாமி படங்கள் அகற்றப்பட்டன. காளிசிலையும் அகற்றப்பட்டது.
ஆசிரமம் மற்றும் பூஜை அறை "புல்டோசர் மூலம் இடித்து தள்ளப்பட்டது. ஜே.சி.பி. இயந்திரம் மூலம் பூஜை அறை முழுவதும்தோண்டப்பட்டது. அங்கு பிணங்கள் புதைக்கப்பட்ட தடயம் எதுவும் இல்லை.
பலி பீடமும் அதேபோல் இடித்துத் தள்ளப்பட்டு, இயந்திரம் மூலம் தோண்டப்பட்டது. பூஜை அறையும், பலி பீடமும் அங்குலம்அங்குலமாக தோண்டி பார்க்கப்பட்டது.
மேலும் சந்தேகத்திற்கிடமான 9 இடங்களும் தோண்டப்பட்டன. எந்த இடத்திலும் பிணங்கள் கிடைக்கவில்லை.
எனவே தோண்டும் பணி முடித்துக் கொள்ளப்பட்டது.












Click it and Unblock the Notifications