மறைந்த 2 தமிழக நிருபர்களின் குடும்பத்துக்கு அரசு உதவி
சென்னை:
மறைந்த இரு தமிழக நிருபர்களின் குடும்பங்களுக்கு தலா 40 ஆயிரம் ரூபாய் குடும்ப நிதியுதவி வழங்க முதல்வர் கருணாநிதிஆணையிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டிலுள்ள பத்திரிகைத் துறையினரின் நலன் கருதி, பத்திரிகைத் துறையில் தொடர்ந்து பணியாற்றிய ஆசிரியர்கள், துணைஆசிரியர்கள், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் ஆகியோர் பணியிலிருக்கும்போது இயற்கை எய்தினால், அவர்களதுகுடும்பத்திற்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கும் "பத்திரிகையாளர் குடும்ப நிதி உதவித் திட்டம்5.3.1997 முதல் இந்த அரசால் நடைறைப்படுத்தப்பட்டு வருகிறது.
"நியூஸ் டுடே நாளிதழின் நிருபராக 18 ஆண்டு காலம் பணி புரிந்த ஏ.பி.அருணாச்சலம் புற்று நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 8ம்தேதி இறந்தார்.
கோவையிலிருந்து வெளிவரும் "மாலை முரசு நாளிதழில் 37 ஆண்டு காலம் முதுநிலை உதவி ஆசிரியராகப் பணியாற்றியவர்நடராசன். இவர் 19ம் தேதி மாரடைப்பால் திடீரென்று இறந்தார்.
இந்த இருவரது குடும்பத்தினருக்கும் முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 40 ஆயிரம் ரூபாய் வீதம் பத்திரிகையாளர்குடும்ப உதவி நிதியாக வழங்க முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.