20,000 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்கிறது தமிழ்நாடு
சென்னை:
தமிழகத்திலிருந்து 20 ஆயிரம் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசுஅனுமதி அளித்துள்ளது என்று தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டிஆறுமுகம் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழதத்தில் அதிக அளவு வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. சில நேரங்களில்வெங்காய விலை வீழ்ச்சியடைவதால் விவசாயிகள் கடுமையாகப்பாதிக்கப்படுகின்றனர்.
இதையடுத்து வெங்காயத்துக்கு குறைந்த விலை நிர்ணயிக்கவேண்டும் ன்ெறு மத்தியஅரசுக்குத் தமிழக அரசு பரிந்துரை செய்தது. மேலும் உள்நாட்டுச் சந்தையில் வெங்காயவிலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நலனுக்காக வெளிநாடுகளுக்குவெங்காயத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டது.
பல மாநிலங்கள் விடுத்த இத்தகைய கோரிக்கையை ஏற்று சுமார் 50 ஆயிரம் டன்வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அரசு அனுமதி அளித்தது. இந்த 50ஆயிரம் டன்னில் தமிழகத்தில் இருந்து மட்டும் 20 ஆயிரம் டன் வெங்காயம் ஏற்றுமதிசெய்யப்படும்.
வெளிநாடுகளுக்கு வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய யார் முன் வந்தாலும் டான்பெக்ட்மூலம் அல்லது நாபெக்ட் மூலம் விண்ணப்பித்து அனுமதி பெற்று வெங்காயத்தைஏற்றுமதி செய்யலாம் என்றார் வீரபாண்டி ஆறுமுகம்.












Click it and Unblock the Notifications