பாகிஸ்தானில் பழ மார்க்கெட்டில் குண்டு வெடித்து 13 பேர் சாவு
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள பழ மார்க்கெட்டில்செவ்வாய்க்கிழமை காலை சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 13 பேர் பலியானார்கள்58 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
அண்டை நாடான ஆப்கானிஸ்தானிலிருந்து ஏராளமான திராட்சைப் பழக்கூடைகள்இஸ்லாமாபாத் பழ மார்க்கெட்டில் வைக்கப்பட்டிருந்தன. ஏலம் விடுவதற்காகவைக்கப்பட்டிருந்த இந்த பழக் கூடைகளில் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டுதிடீரென்று வெடித்தது.
இதில் திராட்சைப் பழக்கூடைகளை ஏலம் வாங்க வந்தவர்கள் 13 பேர் இறந்தனர். 58பேருக்கு மேல் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில்சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பலருடைய நிலை மிகவும் மோகமாக உள்ளது. அதனால்,உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என்று இஸ்லாமாபாத் நகரமுதுநிலை போலீஸ் கண்காணிப்பாளர் நசீர் கான் துரானி தெரிவித்தார்.
இந்த குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. மேலும்யார் குண்டு வைத்தது என்றும் தெரியவில்லை என்றார் அவர்.
இந்த மாதத்தில் பாகிஸ்தான் நகரத்தில் நடக்கும் மூன்றாவது குண்டு வெடிப்பு இது.ஏற்கெனவே இம் மாத தொடக்கத்தில் லாகூரில் இரு இடங்களில் குண்டு வெடித்ததில் 8பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.