தோழியுடன் புது மணப்பெண் தற்கொலை
கோவை:
கோவை அருகே திருமணம் ஆகி 10 நாட்களே ஆன புது மணப்பெண் உள்பட இரண்டு இளம் பெண்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
கோவை அருகே உள்ள அவிநாசியைச் சேர்ந்தவர் வளர்மதி (20). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த ருக்மணியும் இணை பிரியாத தோழிகளாக இருந்துவந்தனர்.
இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இதே பகுதியைச் சேர்ந்த மில் தொழிலாளி கணபதிக்கும் வளர்மதிக்கும் திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்குபின்னர், ருக்மணியும் வளர்மதியும் பிரிய முடியாமல் மனக் குழப்பத்திற்குள்ளாயினர்.
இந்நிலையில் இருவரும் செப்டம்பர் 17ம் தேதி விஷம் குடித்தனர். இதில் மயக்கமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில்இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இவர்களது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.
இந்த சம்பவம் குறித்து அவிநாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications