இதோ ஒரு மனித மிருகம்!
ரியோ ரான்சோ:
தனது வாகனத்தின் பின்பக்கம் முயலைக் கட்டி இழுத்து, அதைக் கொடூரமான முறையில் கொன்ற வாலிபர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் மெக்ஸிகோ நாட்டில், ரியோ ரான்சோ பகுதியில் செவ்வாய்க்கிழமை நடந்தது.
போலீஸ் செய்தித் தொடர்பாளர் பிரான்சிஸ் இதுகுறித்துக் கூறுகையில், ஜானி கார்சியா என்ற 21 வயது வாலிபர், 21 கிலோ எடையுள்ள அழகான,வெள்ளை முயல்குட்டியை தனது வாகனத்தில் பின்புறம் கட்டி வைத்துக் கொண்டு, வாகனத்தை மிக வேகமாக ஓட்டிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அதைப் பார்த்த நபர் ஒருவர், போலீஸாருக்கு தொலைபேசி மூலம் புகார் கொடுத்தார்.
இதையடுத்து அப்பகுதிக்கு வந்த போலீஸார் அவரைத் தடுத்து நிறுத்தினர். ஆனால் அதற்குள் அந்த அழகான முயல்குட்டி பரிதாபமாக இறந்துவிட்டது.கொழுகொழுவென்று மிகவும் ஆரோக்கியமாக காணப்பட்ட அந்த முயல்குட்டி யார் வீட்டிலேயாவது செல்லப் பிராணியாக இருந்திருக்கலாம் என்றுதெரிகிறது.
தற்போது பிராணிகள் வதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜானி கார்சியா கைது செய்யப்பட்டார். கொடூரமான முறையில் முயலைக் கொன்றதற்காக அவருக்கு18 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றார் பிரான்சிஸ்.