காஞ்சி பட்டு வியாபாரிகளிடம் சோதனை: ரூ.80 கோடி பறிமுதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காஞ்சிபுரத்தில் பிரபல பட்டு வியாபாரிகளிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். அவர்களிடம்இருந்து ரூ. 80 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணத்தை கணக்கில் காட்டாமல் அவர்கள் பதுக்கி வைத்திருந்தனர்.

பட்டுக்கு பெயர் பெற்றது காஞ்சிபுரம். தீபாவளி பண்டிகை நெருங்குவதால் பட்டு சேலைகள், வேட்டிகள் மொத்த விற்பனைதீவிரம் அடையும் நேரம் இது.

காஞ்சிப் பட்டுக்கு இந்தியா முழுவதுமே கிராக்கி உண்டு. எனவே பட்டு மொத்த வியாபாரிகள் கையில் கோடிக் கணக்கில் பணம்புரளும். ஆனால், விற்பனையை கணக்கில் காட்டாமல் வருமான வரித் துறையை சில வியாபாரிகள் ஏமாற்றுகின்றனர் என்றதகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அந்த வியாபாரிகளின் வீடுகளையும், விற்பனை நிலையங்களையும் அதிகாரிகள் கண்காணித்தனர். சிலநாட்களுக்கு முன் இந்த வியாபாரிகளின் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.

குறிப்பாக 3 முக்கிய பட்டு வியாபாரிகளின் வீடுகளில் மட்டும் கோடி கோடியாக கணக்கில் காட்டாத பணம் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் போலிப் பட்டுக்களை வியாபாரம் செய்து கோடிக் கணக்கில் கொள்ளை லாபம் சம்பாதித்தவர்கள் என்ற தகவலும் தெரியவந்துள்ளது.சோதனை விவரங்களை வெளியிட வருமான வரித்துறை மறுத்து விட்டாலும், கணக்கில் காட்டப்படாத கறுப்புப்பணம் 80 கோடி ரூபாய் அளவில் கைப்பற்றப்பட்டதாக இத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+