Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நகைகளை கொள்ளையடித்த இளவரசன், இளவரசி!

Subscribe to Oneindia Tamil

கேன்பெரா (ஆஸ்திரேலியா):

ஒரு பக்கம் ஒலிம்பிக் கோலாகலத்தில் சிட்னி நகரமே ஜொலித்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் கச்சிதமாகதிட்டம் தீட்டி நகைக்கடையில் தனது கைவரிசையைக் காட்டியுள்ளது ஒரு ஜோடி.

துபாயைச் சேர்ந்த இளவரசன்-இளவரசி என்று சிட்னி நகைக்கடையில் பொய் கூறி, லட்சக்கணக்கில் நகைகளைக்கொள்ளையடித்த அந்த இளம்ஜோடியை போலீஸார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்துப் புலனாய்வுத்துறை அதிகாரி பால் டன்ஸ்டன் கூறுகையில்,

சிட்னி நகரின் மையப் பகுதியில் உள்ளது சிட்னி ஸ்டோர் நகைக்கடை. செவ்வாய்க்கிழமை மிகவும் விலையுயர்ந்தஆடை அணிகலன்களை அணிந்த இளம் ஜோடி ஒன்று இங்கு வந்தது.

அவர்கள், தாங்கள் துபாயைச் சேர்ந்த இளவரசன், இளவரசி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.அவர்களுக்கு நகைக்கடை உரிமையாளர் பல்வேறு விதமான நகைகளை காட்டினார். அப்போது, அவர்கள் 30, 000பெறுமானமுள்ள டைமன்டை பார்த்து, இது மிகவும் மலிவானது என்று கூறினர்.

இதனால் நகைக்கடை உரிமையாளர் அதை விட விலை அதிகமுள்ள பல டைமன்டுகள் மற்றும் விலையுயர்ந்தநகைகளைக் காட்டினார். அப்போது, திடீரென்று அவர்கள் இருவரும் மாயமாக மறைந்தனர். கடை உரிமையாளர்நோக்கியபோது 5 லட்சம் ஆஸ்திரேலிய டாலர்கள் மதிப்புள்ள 25 டைமண்டுகளைக் காணவில்லை என்றுகண்டுபிடித்தார்.

இதேபோல் இன்னொரு நகைக்கடையிலும் அவர்கள் இதே போல் 4 லட்சம் ஆஸ்திரேலிய டாலர்கள் மதிப்புள்ள30 வகையான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது என்றார் பால் டன்ஸ்டன்.

மேலும் நகைக்கடைகளில் கூடுதல் பாதுகாப்பு போட வேண்டும் என்றும் அவர் கூறினார். இந்த இரு சம்பவங்கள்குறித்து சிட்னி நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+