மாருதி கார் நிறுவன ஊழியர்கள் வேலைநிறுத்தம் தீவிரம்
டெல்லி:
மாருதி உத்யோக் நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் கார்உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதன்முறையாக சிறிய கார்களை உற்பத்தி செய்து விற்பனை செய்துவருவது மாருதி உத்யோக் நிறுவனம். இந் நிறுவனத்தில் இந்திய அரசுக்கும்,ஜப்பானின் கார் உற்பத்தி நிறுவனமா சுசூகி மோட்டார் நிறுவனத்துக்கும் தலா 50சதவீத பங்கு உள்ளது.
இந் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களுக்கு புதிய பென்ஷன்திட்டத்தையும், புதிய சம்பள விகிதத்தையும் அறிவிக்கவேண்டும் என்று நீண்டநாட்களாகக் கோரி வருகின்றனர். ஆனால், இதுவரை அவர்களது கோரிக்கைகள்நிறைவேற்றப்படவில்லை.
இதையடுத்து கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்றுமுடிவு செய்து திங்கள்கிழமை முதல் அவர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.
எங்களது நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால்போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். ஊழியர்களின்வேலைநிறுத்தத்தால் டெல்லி அருகே உள்ள கர்கோவான் மாருதி கார் உற்பத்திநிறுவனத்தில் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
போராட்டத்தைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரும்படி நிர்வாகம் கேட்டுக்கொண்டது. ஆனால், எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம்தொடரும். அதுவரை பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளமாட்டோம் என்று மாருதிஉத்யோக் நிறுவன ஊழியர் சங்கத்தின் பொருளாளர் ஜி.கே. வாலியா தெரிவித்தார்.
மாருதி நிறுவன நிர்வாகமோ, செப்டம்பர் 23-ம் தேதிதான் கடைசி நாள். அதற்குள்ஊழியர்கள் தங்களது வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பவேண்டும்.இல்லையென்றால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.