பெட்ரோல் விலை உயர்வு: மத்திய அமைச்சரவை விரைவில் முடிவு
சேலம்:
காஸ் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு குறித்து மத்திய அமைச்சரவை முடிவு செய்யும் என பெட்ரோலிய இணை அமைச்சர் பொன்னுசாமிதெரிவித்துள்ளார்.
சேலத்தில் நிருபர்களுக்கு புதன்கிழமை அவர் அளித்த பேட்டி:
பெட்ரோல் பங்குகள் பொதுத் துறை நிறுவனங்களுக்கு அளிக்க அரசு அனுமதியளித்துள்ளது. 10 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட 15 கிலோ மீட்டர்சுற்றளவுப் பகுதி, மற்றும் பஞ்சாயத்து யூனியன் ஆகிய இடங்களில் பெட்ரோல் பங்குகள் அமைக்கப்படும்.
இன்னும் சமையல் எரிவாயு இணைப்புக் கேட்டு விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கை 14 லட்சம் பேராக உள்ளது.
கார்களில் காஸ் உபயோகிப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான சட்டத் திருத்தம் குடியரசுத் தலைவரின் கையெழுத்திற்குஅனுப்பப்பட்டுள்ளது.
கார்களில் காஸ் உபயோகிக்க புதிய வகை சிலிண்டர் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதனையே கார்களில் உபயோகிக்க வேண்டும்.
காஸ் சிலிண்டர் ஒன்றிற்கு அரசு 163 ரூபாய் மானியமாக அளித்து வருகிறது. மண்ணெண்ணெய் லிட்டர் ஒன்றிற்கு 6 ரூபாயும், டீசலுக்கு மூன்று ரூபாயும்மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
மத்திய எண்ணெய்த் தொகுப்பிற்கு இதுவரை 9 ஆயிரம் கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அடுத்த மார்ச் மாதத்திற்குள் இந்த பற்றாக்குறை20 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும்.
பெட்ரோலியப் பொருட்களின் விலை தற்போது உயருமா என கூற இயலாது. இது குறித்து அமைச்சரவை விரைவில் முடிவெடுக்கும். புதியபெட்ரோலிய உற்பத்தி இடங்களை கண்டறியும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது.
கடல்பகுதியில் 12 இடங்களிலும், சமவெளிப் பகுதி 6 இடங்களிலும், 6 கடற்கரைப் பகுதிகளிலும் பெட்ரோலியப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.இதனைப் பயன்படுத்த உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் பொன்னுசாமி.












Click it and Unblock the Notifications