ராஜ்குமார்: கன்னட சினிமா துறையினர் பேரணி
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமாரை விடுவிக்கக் கோரி, கர்நாடக பிலிம் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் சினிமாத்துறையினர் பெங்களூரில் வியாழக்கிழமை பேரணி நடத்திகவர்னரிடம் மனு கொடுத்தனர்.
பேரணி கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார் தலைமையில் நடந்தது.
இந்தப் பேரணி மெஜஸ்டிக் அருகேயுள்ள கெம்பேகவுடா ரோட்டிலுள்ள பன்னப்பா பூங்காவில் தொடங்கி ராஜ்பவன் ரோட்டிலுள்ள கவர்னர் மாளிகையைஅடைந்தது.
அங்கு கவர்னர் ரமாதேவியைச் சந்தித்து மனு கொடுத்தது. இந்தப் பேரணியில் நடிகர் அம்பரீஷ், நடிகர் ராஜ்குமாரின் மகன் ராகவேந்திரா ராஜ்குமார், புனித்ராஜ்குமார், நடிகை ஜெயந்தி உள்பட 1000 க்கும் மேற்பட்ட சினிமா பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
பெங்களூரில் 144 தடையுத்தரவு போடப்பட்டிருப்பதால், தடையையும் மீறி இந்த பேரணி நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
மேலும் பேரணியில் எந்த அசம்பாவிதச் சம்பவமும் ஏற்படாதவாறு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications