சந்திரிகாவுக்கு இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு
கொழும்பு:
இலங்கை நாடாளுமன்றத்துக்கு விரைவில் நடைபெற உள்ள தேர்தலில் அதிபர்சந்திரிகா குமாரதுங்காவை ஆதரிப்பது என்று இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் முடிவுசெய்துள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இணைத் தலைவர் ராஃப் ஹக்கீம், அதிபர் சந்திரிகாகுமாரதுங்காவை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். நீண்ட நேரம் நடந்தபேச்சுவார்த்தையின் முடிவில் சந்திரிகாவை ஆதரிப்பது என்று முடிவுஎடுக்கப்பட்டதாக ஹக்கீம் தெரிவித்தார்.
அக்டோபர் 10-ம் தேதி நடைபெறும் தேர்தலில் சந்திரிகாவையும், அவரது மக்கள்கூட்டணிக் கட்சியையும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிக்கும் என்றார் அவர்.
இலங்கை முஸ்லிம் காங்கிரஸுக்கும் மக்கள் கூட்டணிக்கும் இடையே சமீப காலத்தில்எழுந்த கருத்துவேறுபாடுகளைக் களைய விரைவில் நடவடிக்ககை எடுக்கப்படும்என்றும் அவர் தெரிவித்தார்.
தேர்தலில் ஆதரவு தெரிவிக்கப்படும் என்று ஹக்கீம் அறிவித்ததை அடுத்து அவரைதுறைமுகங்கள் வளர்ச்சி, மறுகட்டமைப்பு மற்றும் மறுவாழ்வுத் துறைக்கான புதியஅமைச்சராக அதிபர் சந்திரிகா நியமித்துள்ளார்.இத் துறையை இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் காங்கிரஸின் தலைவர் அஷ்ரப் கவனித்துவந்தார். சில நாட்களுக்கு முன் நடந்த விமான விபத்தில் அவர் இறந்தார். இதையடுத்துகாலியாக இருந்த அந்த அமைச்சர் பதவியில் ஹக்கீம் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications