பிரான்ஸ் சுற்றுலா கண்காட்சியில் இந்திய சுற்றுலா இயக்குநர்கள் பங்கேற்பு
பாரீஸ்:
பிரான்ஸில் வியாழக்கிழமை தொடங்கும் சுற்றுலா கண்காட்சியில் இந்தியாவைச்சேர்ந்த 10 பெரிய சுற்றுலா இயக்குநர்கள் பங்கு கொள்கின்றனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டேவில்லிஎன்ற நகரில் டாப் ரேசா என்ற பெயரில் இந்த சுற்றுலாக் கண்காட்சி நடைபெறுகிறது.உலகின் மிகப் பெரிய சுற்றுலாக் கண்காட்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் சுற்றுலாத் துறையில் ஈடுபட்டு வருபவர்கள் இக் கண்காட்சியில்கலந்து கொள்கின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் 1,018 பேர் கலந்துகொண்டனர்.
இந்த ஆண்டு நடைபெறும் கண்காட்சியில் கூடுதல் எண்ணிக்கையிலான சுற்றுலாஇயக்குநர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியாவிலிருந்தும் 10 பெரிய சுற்றுலா இயக்குநர்கள் கலந்துகொள்கின்றனர்.
சுற்றுலாத் துறையில் புதிய வாய்ப்புகள், சுற்றுலாப் பயணிகளின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கான புதிய முயற்சிகள், வசதிகள் ஆகியவை பற்றி கண்காட்சியைப்பார்வையிட வரும் நபர்களுக்கு கண்காட்சியில் பங்கு கொண்டுள்ள சுற்றுலாஇயக்குநர்கள் விளக்குவார்கள்.
ஐ.ஏ.என்.எஸ்.