சிகாகோ பெருமாள் கோவிலுக்கு 51 கிலோ வெள்ளி வாகனம்
சென்னை:
அமெரிக்காவில் சிகாகோ நகரில் அமைந்துள்ள ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் கோயிலுக்காக 51 கிலோ வெள்ளியால்உருவாக்கப்பட்ட யானை வாகனம், விமானம் மூலம் அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
அமெரிக்காவில் சிகாகோ நகரில் ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கென வெள்ளியால்செய்யப்பட்ட "கஜானா என்ற யானை சென்னையில் உருவாக்கப்பட்டது.
ஸ்ரீவெங்கடேசப் பெருமாளின் வாகனமாக உருவாக்கப்பட்ட இந்த கஜவாகனம் சென்னையில் உள்ள சுக்ரா ஏற்றுமதி நகைதயாரிப்பாளர்களால் உருவாக்கப்பட்டது.
இந்த யானையை உருவாக்க 51 கிலோ வெள்ளி பயன்படுத்தப்பட்டுள்ளது. யானையின் முன் பகுதி பித்தளையால்உருவாக்கப்பட்டு வெள்ளி முலாம் பூசப்பட்டுள்ளது. யானையின் நகங்களும் பித்தளையால் உருவாக்கப்பட்டு வெள்ளி முலாம்பூசப்பட்டுள்ளது.
இந்த வெள்ளி யானையை 16 பொற் கொல்லர்கள் இணைந்து ஆகம விதிப்படி வடிவமைத்து 120 நாட்களில் செய்துமுடித்துள்ளனர்.
இந்திய கலாசாரத்தின் வடிவமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த வாகனத்தை சிகாகோவில் உள்ள ஸ்ரீவெங்கடேசப் பெருமாள்கோயிலுக்கு அமெரிக்க வாழ் இந்தியரான நீராவலூர் டாக்டர் ராகவன், வத்சலா ராகவன் இணைந்து நன்கொடையாகவழங்கியுள்ளனர்.