சாராயம் விற்ற பெண் சொந்த ஊருக்குள் செல்ல தடை
கோவை:
சாராயம் விற்கும் பெண், ஆறு மாதம் காலத்திற்கு ஊருக்குள் நுழையக் கூடாது எனகோவை மாவட்டம், பல்லடத்தில் உள்ள நீதிமன்றம் புதிய தீர்ப்பு ஒன்றை அளித்தது.
கோவை மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சென்னிமலையாம் பாளையத்தைச்சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மனைவி சுந்தராம்பாள் (60). இவர் சாராயம் விற்றுவந்தார்.பல முறை இவர் நீதிமன்றத்திற்குச் சென்று அபராதம் செலுத்தி வந்தார்.
கடந்த முறை கோவை டி.ஐ.ஜி, ராஜேந்திரன் தலைமையில் நடந்த சோதனையில் இவர்கைது செய்யப்பட்டார். இவரது வீட்டில் போலீசார் 5 லிட்டர் சாராயத்தையும்கைப்பற்றி வழக்குத் தொடர்ந்தனர். வழக்கு விசாரணை செப்டம்பர் 21ம் தேதிபல்லடம் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் மாஜிஸ்திரேட் பொங்கண்ணன், அளித்த தீர்ப்பில்,
சுந்தராம்பாளுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். அத்துடன் அவரது சொந்தஊருக்குள் ஆறு மாத காலத்திற்குச் செல்லக் கூடாது எனத் தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications