போதை மருந்து: பல்கேரிய வீரர் மற்றும் வீராங்கனையிடமிருந்து பதக்கங்கள் பறிப்பு
சிட்னி:
சிட்னி ஒலிம்பிக்கில் போதை மருந்து பரிசோதனையில் பல்கேரியா நாட்டின் பளுதூக்கும்வீரர், வீராங்கனைகள் சிக்கிக் கொண்டனர்.
இரு வீரர்கள் மற்றும் ஒரு வீராங்கனையிடமிருந்து போட்டிகளில் அவர்கள் வென்றபதக்கங்கள் பறிக்கப்பட்டுள்ளன.
பெண்களுக்கான 48 கிலோ எடைப் பிரிவில் அந் நாட்டின் இஸபெல்லா டிராஜிநேவாதங்கப் பதக்கம் வென்றார். செவ்டாலின் மின்செவ் ஆண்களுக்கான 62 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இவர்களிடம் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் இவர்கள் போதை மருந்துபயன்படுத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரிடமிருந்தும்பதக்கங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவர்களுக்கு அடுத்த இடங்களைப் பெற்றவர்களுக்கு இப் பதக்கங்கள் வழக்கப்படும்.பதக்கங்கள் பறிக்கப்பட்டதுடன் அவர்கள் சிட்னி ஒலிம்பிக்கிலிருந்தும் அவர்கள்நீக்கப்பட்டனர்.
பளுதூக்கும் போட்டியில் அவர்கள் தூக்கிய எடை அளவு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. அவை எல்லாம் ரத்து செய்யப்பட்டுவிட்டன என்று சர்வதேச ஒலிம்பிக்கமிட்டியின் மருத்துவ கமிஷன் உறுப்பினர் ஜாக்ஸ் ரோக்கி தெரிவித்தார்.
ஏற்கெனவே ஆண்களுக்கான 56 கிலோ எடைப் பிரிவில் மற்றொரு பல்கேரிய வீரர்இவான் இவானோவ் போதை மருந்துப் பரிசோதனையில் பிடிபட்டார். அவர் வென்றவெள்ளிப் பதக்கம் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக்கில் பல நாட்டு வீரர்களுடன் போட்டியிட்டு வென்ற பதக்கங்களை போதைமருந்துப் பரிசோதனையில் சிக்கி பல்கேரிய வீரர்களும், வீராங்கனையும் இழந்ததால் அந்நாட்டுக்குத் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.
ஒலிம்பிக்கில் பளுதூக்கும் போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனை ஒருவர் போதைமருந்துப் பரிசோதனையில் சிக்கி பதக்கத்தை இழந்தது இதுவே முதல் முறை என்பதுகுறிப்பிடத்தக்கது. அத்தகைய சாதனையை பல்கேரிய வீராங்கனை புரிந்துள்ளார்.
பல்கேரிய வீராங்கனை இஸபெல்லாவிடமிருந்து பறிக்கப்பட்ட தங்கப் பதக்கம், அப்பாட்டியில் இரண்டாம் இடம் பிடித்த அமெரிக்க வீராங்கனை தாரா நாட்டுக்குவழங்கப்படுகிறது.
மூன்றாம் இடம் பிடித்த இந்தோனேஷிய வீராங்கனை ரேமா லிசா ரம்பேவாஸுக்குவெள்ளியும், மற்றொரு இந்தோனேஷிய வீராங்கனை ஸ்ரீ இந்திரியானி வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.












Click it and Unblock the Notifications